தங்க சங்கிலியை கூழாங்கல்லாக மாற்றிய சாமியார்

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (18:17 IST)
சென்னையில் உடல் குறையை போக்குவதாக கூறிய 6 பவுன் சங்கிலியை கூழாங்கல்லாக மாற்றிய சாமியார் கைது செய்யப்பட்டார்.


 

 
சென்னை ஆவடியைச் சேர்ந்த நாகம்மாள்(55) கடந்த 7 மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் அவரின் பூக்கடையை சரியாக நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். தனது உடல்நிலை குறித்து நாகம்மாள் ராஜி என்பவரிடம் கூறியுள்ளார்.
 
அதற்கு ராஜி, துஷ்ட சக்திகள் உடம்பில் இருப்பதால், அதை நீக்க மாந்திரீகம் செய்ய சாமியாரை அணுகலாம் என கூறியுள்ளார். நாகம்மாள் அதற்கு ஒப்புக்கொண்டு மாந்திரீகம் செய்யும் சாமியார் வீட்டுக்குச் சென்றார். அங்கு சாமியார் நாகம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை ஒரு பாத்திரத்தில் போட சென்னார். அதை வைத்து பூஜை நடத்தியதோடு, வீடு முழுக்க புகையை போட்டுள்ளார்.
 
அதோடு நாகம்மாளிடம் அரை மணி நேரம் கண்களை மூடி தியானம் செய்யும்படி கூறியுள்ளார். அதன்பின் உடல்நிலை சரியாகும் வரை அந்த பாத்திரத்தை திறந்து பார்க்காமல் பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
 
இதன்காரணமாக நாகம்மாள் உடல்நிலை சரியாகும் வரை அந்த பாத்திரை திறந்து பார்க்காமல் இருந்துள்ளார். 7 மாதத்திற்கு பிறகு உடல்நிலை சரியானவுடன் பாத்திரத்தை திறந்து பார்த்துள்ளார். அதில் தங்க நகைக்கு பதில் கூழாங்கல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகம்மாள் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் அந்த சாமியாரை கைது செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

அடுத்த கட்டுரையில்
Show comments