Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விட்டா ரஜினிய ஊட்டி விட சொல்லுவீங்க – கடுப்பான எஸ்.வி.சேகர்!

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (13:56 IST)
சினிமா ஊழியர்களுக்கு நிதியளித்த விவகாரத்தில் ரஜினியை விமர்சித்த கௌதமனுக்கு எஸ்.வி.சேகர் பதிலளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பாதிக்கப்பட்டுள்ள சினிமா ஊழியர்களுக்கு உதவி செய்வதற்காக சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நிதி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் 50 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். ரஜினியின் இந்த நிதியுதவி குறித்து விமர்சித்த இயக்குனர் கௌதமன் “ரஜினி 50 லட்சம் கொடுத்ததற்கு பதிலாக மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு ரஜினி ரசிகர்களே ரியாக்‌ஷன் காட்டாத நிலையில் களமிறங்கிய எஸ்.வி.சேகர் ’விட்டால் ரஜினியை சமைத்து ஊட்டி விட சொல்வார்கள் போலிருக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ரஜினியை திட்டி பேசி கௌதமன் பிரபலம் ஆவதற்கு முயற்சிப்பதாகவும், அவரது லட்சியம் நிறைவேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை முதல் மீன்பிடி தடைகாலம் தொடக்கம்.. இன்றே எகிறிய மீன் விலை..!

ட்ரம்ப் கட்சியுடன் மட்டும்தான் கூட்டணி: தனித்து போட்டியா? என்ற கேள்விக்கு சீமான் பதில்

பொன்முடியால் திமுக ஆட்சியை இழக்கலாம்.. உளவுத்துறை அறிக்கை கொடுத்ததா?

ஒரு திருடன் நல்லவனாக மாறிவிட்டால் மன்னிக்க மாட்டோமா.. பாஜக கூட்டணி குறித்து பொன்னையன்..!

திடீரென கண் திறந்த அம்மன் சிலை.. திசையன்விளை கோவிலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments