Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கெல்லாம் ரூ.6000 நிவாரண தொகை?- அரசு தகவல்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (13:48 IST)
சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்த கனமழையால், சென்னையில் உள்ள  பல பகுதிகள் வெள்ளத்தில் பபாதிக்கப்பட்டன. பலர் ஆபத்தான  நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டு முகாமகளில் தங்க வைக்கப்பட்டனர். அரசின் துரித முயற்சியையும், அதிகாரிகளின் நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இந் நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை பெற தகுதி படைத்தோர் யார் என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ‘’ரேசன்  அட்டை வைத்திருப்போர். ரேசன் அட்டைக்காக விண்ணப்பித்திருப்போர். வாடகை ஒப்பந்தம்  வைத்திருபோர், கேஸ் பில் வைத்திருப்போர், ஆதார் அட்டையுடன் சென்னையில் பல ஆண்டுகளாக வசித்து வருவோர் இந்த நிவாரணத் தொகை பெற தகுதியுடையோர்’’ என்று தெரிவித்துள்ளது.

ரூ.  6 ஆயிரம் மழை வெள்ள நிவாரணத் தொகையை  மூன்று பிரிவுகளாக அரசு வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments