Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை பார்த்து அஞ்சி நடுங்கும் தமிழக அரசு!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (17:36 IST)
தமிழக அரசு திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து அஞ்சி வருகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி.

 
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டியளித்தார். அவர் கூறியதாவது, கொரோனா காலத்தில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்யாத தமிழக அரசு, திமுகவின் செயல்பாடுகளைப் பார்த்து அஞ்சி வருகிறது. 
 
திமுக தலைவர் கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய கிராம சபைக் கூட்டத்திற்கும் அதைத் தொடர்ந்து அதற்கு மக்கள் அளித்துவரும் அமோக ஆதரவையும் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதற்கு தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மக்கள் கிராம சபை கூட்டம் என்ற பெயரில், கூட்டம் தொடர்ந்து நடைபெறும். 
 
சட்ட விதிகளுக்கு உட்பட்டே மக்களை சந்திக்கும் கூட்டங்களை திமுக நடத்தி வருவதாகவும் அதற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த முயற்சியையும் திமுக சந்திக்கும் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments