Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி: தமிழிசை சவுந்தரராஜன்

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2015 (01:24 IST)
தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது என  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 

 
சென்னை மயிலாப்பூர் சித்திரைக்குளம் கரையில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாஜக சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
சென்னை கடும் தொடர் மழை காரணமாக பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் பார்வையிட்டார். இதில், அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி மிகவும் சேதம் அடைந்துள்ளதாக தமிழக அரசு உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
 
இதில், தமிழகத்தில் வெள்ள பாதிப்பு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி என்று தெரிய வந்துள்ளது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி மத்திய அரசிடம், மாநில அரசு கோரி உள்ளது. தமிழக அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கும் என்றார்.
 
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments