Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் முகக்கவசம் அணியாத 3,174 பேர் - ரூ.6.34 லட்சம் வசூல்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (12:25 IST)
சென்னையில் முகக்கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.6.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
 
மேலும் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பலர் மாஸ்க் அணிவதை தவிர்த்து அலட்சியம் காட்டுவதும் தொடர்கிறது. இந்நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்ற நடைமுறை தற்போது தமிழகத்தில் உள்ளது. 
 
அந்த வகையில் சென்னையில் முகக்கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.6.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 1,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

தி.மு.க.வை மட்டுமே நம்பி விசிக இல்லை: தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுப்போம்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments