Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 ரூபாய் டிக்கெட் எடுத்தால் கிளாம்பாக்கத்திலிருந்து எங்கும் செல்லலாம்! புதிய வசதி அறிமுகம்..!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:12 IST)
40 ரூபாய் டிக்கெட் எடுத்து  கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் கிளாம்பாகத்தில் இருந்து தான் கிளம்ப வேண்டும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னையில் உள்ள எந்த இடங்களுக்கு வேண்டுமானாலும் மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் நான்கு மணி நேரத்திற்குள் பயணம் செய்து கொள்ளலாம் என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த டிக்கெட்டை மாநகரப் போக்குவரத்து கழக செயலின் மூலம் வெளியிடப்படும் என்றும் போக்குவரத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போதே கூடுதலாக 40 ரூபாய் செலுத்திக் கொள்ளலாம் என்றும் இதனால் காலவிரயம் இன்றி கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையில் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
 இந்த திட்டம் மார்ச் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்த உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments