Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய வசதிகள்: ரூ.381 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல்!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:03 IST)
தூத்துக்குடி விமான நிலையத்தில் 381 கோடி செலவில் புதிய வசதிகள் செய்து தரப்படும் என விமான துறை தகவல் தெரிவித்துள்ளது. 
 
இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய ஓடு பாதை அமைத்தல், புதிய கட்டிடம் கட்டுதல், தொழில்நுட்ப பிரிவு அமைத்தல், கட்டுப்பாட்டு கோபுரம் அமைத்தல், புதிய தீயணைப்பு நிலையம் அமைத்தல் ஆகியவைகளுக்கு ரூபாய் 381 கோடி செலவு செய்யப்படும் என அறிவித்துள்ளது 
 
தினமும் 6000 பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக தூத்துக்குடி விமான நிலையம் இருக்கும் என்றும் இரண்டு மேம்பாலங்கள் கார் நிறுத்தும் வசதி உள்பட அனைத்து நவீன வசதிகளும் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்யப்படும் என்றும் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது 
 
இந்த அறிவிப்பு தூத்துக்குடி பகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாநிலங்களவையில் 2 சீட்டுகளுமே அதிமுக வேட்பாளர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக? - அடுத்த முடிவு என்ன?

பாஜக அரசைக் கண்டித்து பொதுக்குழுவில் திமுக தீர்மானம்!

சமஸ்கிருதத்தில் இருந்து தான் தமிழ் பிறந்தது என்றால் நாம் ஏற்று கொள்வோமா? கமலுக்கு கவர்னர் கேள்வி

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

அடுத்த கட்டுரையில்
Show comments