Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்.. சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:06 IST)
சென்னையில் இன்று காலை 1.3 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் பெண் ஐடி ஊழியர் உள்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் 35 கோடி மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கம்போடியா நாட்டிலிருந்து சென்னைக்கு விமான மூலம் போதை பொருள் கடத்திவரப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் விமானத்தில் வந்த பயணிகளிடம் சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் சென்னை வந்த இளைஞரிடம் சோதனை செய்த போது அவரிடம் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது 
 
கம்போடியாவில இருந்து அந்த போதைப் பொருளை சென்னைக்கு கடத்தி வந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது அடுத்து இளைஞரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த போதை பொருளை யாரிடமிருந்து கொண்டு வந்தார்? யாருக்கு அந்த இளைஞர் கொண்டு செல்கிறார்? என்பது போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
சென்னை விமான நிலையத்தில் 35 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கைப்பற்றிய தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போதை பொருளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது. 
 
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments