தமிழக அரசின் ரூ..2000 சிறப்பு நிதி திட்டம் : உயர்நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
வியாழன், 7 மார்ச் 2019 (12:36 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்குவதாக அறிவித்தார். இதற்காக திட்டத்தை  முறைப்படுத்துவதற்காக ரூ.1200 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. 
இதை மக்கள்  பலரும் வரவேற்றார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள சில கட்சிகள் இது தேர்தலுக்காக மக்களை கவரும் விதத்தில் அளிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்கள்.
 
இந்நிலையில் விழுபுரத்தைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.ரூ.2000 சிறப்பு நிதி  வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ளவர்களுக்கு என்று சொல்லிக் கொண்டு அத்தனை மக்களுக்கும் தருகிறார்கள் எனக்  கூறியிருந்தார்.
 
 மேலும் நிதியுதவியில் 7 பேர் கொண்ட குழு என்று கூறிவிட்டு 9 பேர் கொண்ட குழு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசாணை திருத்தியது பற்றி மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
 
இவ்வழக்கின் விசாரணை முடிந்ததை அடுத்து நீதிபதி சுந்தர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் பயனாளிகல் கண்டறிய சிறப்பான நடைபெறுவதாகக் நீதிபதிகள் கூறினர். மேலும் ரு. 2000 நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு தடையில்லை என்று கூறி கருணாநிதி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல அலுவலர்களுக்கு SIR செயலியை இயக்க தெரியவில்லை.. செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு..!

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments