Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.200 கோடி லஞ்சம் பெற்றார் மு.க.ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:50 IST)
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஷெல் கம்பெனிகளிடம் இருந்து ரூபாய் 200 கோடி லஞ்சம் பெற்றார் என அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர் பேசியபோது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் போது ஷெல் கம்பெனிகளிடம் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் 200 கோடி லஞ்சம் பெற்றார் என்று தெரிவித்தார். 
 
இந்த திட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59% மத்திய அரசு 15 சதவீதம் மாநில அரசு 21 சதவீதம் நிதிகளை தந்தன என்று  அண்ணாமலை தெரிவித்தார். டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும்போது ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள் என்றும் டென்டரில் சுங்கவரியை சேர்க்க போகிறோம் என்ற திருத்தம் தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் இந்த திட்டத்திற்காக இரண்டு நாடுகளை சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் 2011 ஆம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூபாய் 200 கோடி முக ஸ்டாலினுக்கு கொடுத்தார்கள் என்றும் இது குறித்து நானே சிபிஐக்கு புகார் அளிக்க போகிறேன் என்றும் அண்ணாம்லை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments