Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ரூபாய் டாக்டர் திடீர் மரணம்: கண்ணீர் விட்ட பொதுமக்கள்

Webdunia
புதன், 3 அக்டோபர் 2018 (22:25 IST)
டாக்டர் தொழில் என்றாலே சேவை மனப்பான்மையுடன் உள்ள தொழில் என்று இருந்த நிலையில் அந்த தொழில் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதுமட்டுமின்றி 'ரமணா' படத்தில் வருவது போன்று பிணத்திற்கு வைத்தியம் பார்க்கும் ஒருசில சம்பவங்கள் குறித்து அவ்வப்போது ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் டாக்டர் தொழிலை முழுக்க முழுக்க சேவை மனப்பான்மையுடன் செய்து வந்த 76 வயது ஜெகன்மோகன் என்ற டாக்டர் இன்று காலமானார். 1975ஆம் ஆண்டு வெறும் இரண்டு ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த இந்த டாக்டர் நேற்று வரை நோயாளிகளிடம் வாங்கிய கட்டணம் வெறும் ரூ.20தான். சென்னை மந்தைவெளியில் சந்திரா கிளினிக் என்ற பெயரில் டாக்டர் தொழிலை செய்து வந்த டாக்டர் ஜெகமோகன் இன்று திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் காலமானார்.

டாக்டரின் மறைவுச்செய்தியை அறிந்து மந்தவெளி பகுதியே சோகமானது. மக்கள் அவருடைய உடலை பார்த்து கண்ணீர்விட்ட காட்சி, அவர் டாக்டர் தொழிலை எந்த அளவுக்கு சேவை மனப்பான்மையுடன் செய்திருந்தார் என்பதை நிரூபித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments