Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிட்டருக்கு ரூ.2..! ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (09:29 IST)
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட வேண்டுமென கோரிக்கைகள் இருந்து வந்த நிலையில் தற்போது பால்வளத்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.



தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் இருந்து வருகிறது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனம். தமிழ்நாடு முழுவதும் பல பால் சொசைட்டிகள் மூலமாக ஆவினுக்கு பால் பெறப்படுகிறது.

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என முன்னதாக பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிட்டருக்கு 3 ரூபாய் கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டது.

இனி பாலின் தரத்திற்கு ஏற்ப கொள்முதல் விலையுடன் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார். அதன்படி உற்பத்தியாளர்கள் வழங்கும் பாலில் 6 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை கொழுப்பு சத்து உள்ள பாலை தரம்பிரித்து அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் தரமான பாலை தொடர்ந்து வழங்கும் உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.2 வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments