Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் உரிமை திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம்: அண்ணாமலை

Webdunia
சனி, 19 ஆகஸ்ட் 2023 (18:04 IST)
மகளிர் உரிமை திட்டம் இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
 
என் மண் என் மக்கள் பாதை யாத்திரையில் இருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை பாளையங்கோட்டையில் பேசிய போது ’திமுக ஆட்சி என்பது தமிழகத்திற்கான சாபக்கேடு என்றும் நீட் சாதாரண மக்களுக்கு எதிரானது அல்ல என்றும் திமுகவிற்கும் திமுகவைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி அதிபர்களுக்கு மட்டுமே எதிரானது என்று தெரிவித்தார்.
 
மேலும் 505 ஊசி போன வடைகளை தான் தேர்தல் அறிக்கையாக திமுக கொடுத்தது என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள எதையுமே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.  
 
27 மாதங்களாக தேர்தலில் வாக்குறுதியாக கொடுத்த எந்த திட்டங்களையும் திமுக நிறைவேற்றவில்லை என்றும் ராமநாதபுரத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் எதையும் செய்யவில்லை என வாய் கூசாமல் முதலமைச்சர் பொய் சொல்கிறார் என்றும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.  
 
கடன் வாங்குவதில் தமிழகம் நம்பர் ஒன் மாநிலமாக இருக்கிறது என்றும்  மகளிர் உரிமை திட்டம் என்பது இந்தியாவின் மிகப்பெரிய பிராடு திட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments