Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ருட்டி அருகே தரைப்பாலம் உடைந்தது: 20 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

Webdunia
ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (06:02 IST)
பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் தரைப்பாலம் திடீரென உடைந்ததால், 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
 

 
கடலூர் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கடும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கெடிலம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில், தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 12 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைக்கு அப்பகுதி கிராம மக்கள் தள்ளப்பட்டனர்.
 
மேலும், இந்த ஆற்றைக் கடக்க முயன்ற கலியப்பெருமாள் என்பவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார் என்பது குறிப்பிடதக்கது.  
 

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments