சென்னை வந்தார் ஆர்.கே.சுரேஷ்.. ஆருத்ரா மோசடி வழக்கில் ஆஜராக இருப்பதாக தகவல்..!

Webdunia
ஞாயிறு, 10 டிசம்பர் 2023 (11:09 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான ஆர் கே சுரேஷ் துபாயில் இருந்து சென்னை வந்துள்ள நிலையில் அவர் ஆருத்ரா மோசடி வழக்கில் காவல்துறை முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்கே சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. 
 
இந்த நிலையில் தான் சென்னை ர இருப்பதாகவும் தன் மீதான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
 
இதனையடுத்து அவரது லுக்அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட நிலையில் 11-ம் தேதி அவர் காவல் நிலையம் முன் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் ஆஜர் ஆவதற்காக சென்னை வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. அவர் நாளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்? தவெக நிர்வாகி கருத்து..!

பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.. தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு..!

விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி.. தவெக தீர்மானம்..!

எதிர்பார்த்தபடியே SIR படிவம் சமர்பிக்க அவகாசம் நீட்டிப்பு! எத்தனை நாட்கள்?

ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை விட்டுக்கு அழைத்து சென்ற இளைஞர்.. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments