ஆருத்ரா மோசடி வழக்கு: நேரில் ஆஜரானார் நடிகர் ஆர்.கே.சுரேஷ்..!

Webdunia
செவ்வாய், 12 டிசம்பர் 2023 (12:01 IST)
ஆருத்ரா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நடிகர் ஆர்கே சுரேஷ், விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று அவர் ஆஜராகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருத்ரா மோசடி வழக்கில் ஆர்.கே. சுரேஷ் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் தாட்டப்பட்டது. இந்த நிலையில் திடீரென ஆர் கே சுரேஷ் துபாய்க்கு சென்று விட்டதை அடுத்து அவர் சமீபத்தில் சென்னை திரும்பினார். 
 
அவரை விமான நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்திய போது நீதிமன்ற உத்தரவுபடி ஆஜர் ஆவதற்காகவே சென்னை வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் சற்றுமுன் அவர் பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ள ஓட்டினால் வெற்றி பெற்ற கட்சிகள் தான் SIRஐ எதிர்க்கின்றன: வானதி சீனிவாசன்

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன் விவகாரம்.. அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகம் வருகிறார் அமித்ஷா.. சுறுசுறுப்பாகும் தேர்தல் களம்..!

ஜனவரி வரைக்கும் வெயிட் பண்ணுங்க!.. தவெக இனிமே வேறலெவல்!.. செங்கோட்டையன் மாஸ்!...

காங்கிரஸ் எம்பிக்களுடன் ராகுல் காந்தி திடீர் ஆலோசனை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments