Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ரூபாய் நோட்டை காண்பித்து முற்றுகையிட்ட பெண்கள்: தினகரன் தொகுதியில் பரபரப்பு

Webdunia
சனி, 9 மார்ச் 2019 (09:48 IST)
ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றபோது திமுக, அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். குறிப்பாக திமுக வேட்பாளரின் டெபாசிட் காலியானது.
 
ஆனால் டிடிவி தினகரன் ரூ.20 டோக்கன் கொடுத்து அந்த டோக்கனுக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டதாக ஆர்கே நகர் வாக்காளர்கள் ஏற்கனவே தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். 
 
இந்த நிலையில் நேற்று டிடிவி தினகரனின் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆர்.கே.நகர் பகுதி பெண்கள், 20 ரூபாய் நோட்டை கையில் காண்பித்தவாறு தினகரனுக்கு எதிராக கோஷமிட்டனர்.
 
வெற்றி பெற்ற பின்னர் தினகரன் தொகுதி பக்கமே வருவதில்லை என்றும், ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படை வசதிகளை அவர் செய்துதரவில்லை என்றும் புகார் தெரிவித்து டிடிவி தினகரனின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments