Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டுக்கு வீடு ரூ.50 ஆயிரம்: பணத்தில் மிதக்கும் ஆர்.கே.நகர்

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2017 (22:29 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் பிரச்சாரம் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் அடுத்தகட்டமாக ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்சி ரூ.2000, இன்னொரு கட்சி ரூ.5000, சுயேட்சை வேட்பாளர் ஒருவர் ரூ.10000 என்ற விகிதத்தில் பணப்படுவாடா நடந்து கொண்டிருப்பதாகவும், ஒரு வாக்காளருக்கு ரூ.18000 என்றால் மூன்று பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு சுமார் ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த முறை ஆர்.கே.நகர் மக்கள் புத்திசாலித்தனமாக அரசியல் கட்சிகள் கொடுக்கும் பணத்தை நகைகள் வாங்கி சேமித்து வைப்பதாகவும், சிலர் அடகில் வைத்த நகையை மீட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலின்போது கிடைக்கும் பணத்தை வைத்து ஆடம்பர செலவு செய்யாமல் புத்திசாலித்தனமாக சேமித்து வைக்கும் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஒருவகையில் பாராட்டப்பட வேண்டியவர்களே என்று அரசியல் விமர்சகர்கள் தொலைக்காட்சி  விவாதங்களில் பேசி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments