Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடந்தது: சந்தீப் சக்சேனா விளக்கம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடந்தது: சந்தீப் சக்சேனா விளக்கம்
, புதன், 1 ஜூலை 2015 (00:51 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாக, நேர்மையாக நடந்தது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கருத்து அளித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மிகவும் அமைதியாக, நேர்மையாக நடைபெற்றுள்ளது. ஆனால்,ஒரு சில கட்சிகள் பல புகார்களை கூறியுள்ளனர்.
 
பொது வாழ்க்கையில் உள்ள அக்கட்சியினர், அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகளை வைக்கும் போது, அதற்கான முழு ஆதாரங்களையும் சேர்த்தே வைக்க வேண்டும்.
 
தேர்தல் கமிஷனிடம் வந்த புகார்களுக்கு பதிலளித்து இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இதை இணையதளத்தில் அனைவரும் பார்க்கலாம் என்றார். 
 

Share this Story:

Follow Webdunia tamil