Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
சனி, 25 நவம்பர் 2017 (12:19 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் மருது கணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


 
வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. எனவே, அரசியல் கட்சிகள் சுறுசுறுப்படைந்துள்ளன. 
 
இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆர்.கே. நகர் தேர்தலில் யாரை நிறுத்துவது என்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. முடிவில், ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது திமுக சார்பாக போட்டியிட்ட மருது கணேஷையே இந்த முறையும் வேட்பாளராக களம் இறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
 
ஆலோசனைக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் ‘ஜனநாயகப்படி தேர்தலை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. மற்ற கட்சியினரிடம் எங்களுக்கு ஆதரவு கேட்போம்’ என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

Slot Gacor: Rahasia di Balik Kemenangan Besar yang Bikin Penasaran Hari Ini!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments