Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் அரசி அளவு குறைப்பு: தமிழக அரசு!

Webdunia
திங்கள், 11 மே 2020 (12:16 IST)
தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைப்பு என அரசு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு மே 17 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீட்டிக்கபப்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிகிறது. ஏற்கனவே மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்க ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலகவசமாக வழங்கப்பட்டது.  
 
இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு 19 பொருட்களை 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டமும் அரசால் செயல்படுத்தியது. இந்நிலையில், தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரிசி அளவு குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 
 
ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 12 கிலோவாகவும் குறைப்பு. இதற்கு முன்னர் ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோ அரிசியும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments