Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும்! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:05 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக கட்டுப்பாடுகள் இருந்தாலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனவரி 31 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 முதல் 12 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்தது.

ஆனால், 10 முதல் 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. மேலும் தற்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், திட்டமிட்டபடி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments