Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு பெற்ற பெண் சப்-இன்ஸ்பெக்டர் கொலை: காஞ்சிபுரம் மதிமுக நிர்வாகியிடம் விசாரணை..!

Mahendran
செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (18:34 IST)
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற பெண் சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக மதிமுக நிர்வாகி இடம் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. 
 
காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் 63 வயது கஸ்தூரி என்பவர் தனது தனது மகனுடன் வாழ்ந்து வரும் நிலையில் இவருக்கும் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி என்பவருக்கும் இடையே சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக பிரச்சனை இருந்ததாக தெரிகிறது.
 
இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி கஸ்தூரி வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை அடுத்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந் நிலையில் கஸ்தூரியின் வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது உள்ளே அவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதியை போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அவரிடம் தற்போது ரகசிய இடத்தில் விசாரணை நடந்து கொண்டு வருவதாகவும் விசாரணையின் முடிவில் தான் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுவது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments