Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

Mahendran
வியாழன், 22 மே 2025 (11:25 IST)
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் தங்க நகை அடமானக் கடன் பற்றிய புதிய கட்டுப்பாடுகள் பொதுமக்கள் மீது பெரும் பாரம் வைக்கிறது என கண்டனம் தெரிவித்தார். 
 
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்க நகைகளை அடமானமாக கொண்டு கடன் வழங்கும் விதத்தில், மத்திய ரிசர்வ் வங்கி புதிய 9 விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகுந்த சிரமத்தை உண்டாக்கும் விதமாக இருக்கும்.
 
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், புதிய விதிகளின் படி கடனாக பெறக்கூடிய தொகை, நகையின் மதிப்பில் இருந்து முன்பு இருந்த 80% அளவில் இருந்து குறைந்து 75% மட்டுமே வழங்கப்படும். மேலும், கடனுக்கு அடமானமாக வைக்கப்பட்ட நகைகளை முழுமையாக மீட்ட பிறகு தான் மீண்டும் கடன் பெற அனுமதிக்கப்படும் புதிய விதி மக்களுக்கு திணறல் ஏற்படுத்தும் என்று அவர் விமர்சித்தார்.
 
அவசர நிதி தேவைப்படுவோருக்கு அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விதிகள் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். மேலும், அவசர தேவைகள் உள்ளவர்களை பல்வேறு ஆவணங்களுடன் அலைக்கழிக்கும் புதிய நடைமுறைகள் மக்களின் கடும் அவலத்திற்கு காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments