Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரிழந்தவர்களின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி !

உயிரிழந்தவர்களின் பெயரில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி !
, செவ்வாய், 11 மே 2021 (12:31 IST)
சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி. 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் பற்றாக்குறை எழுந்துள்ளது.
 
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விநியோகிக்கப்படுகிறது. இதனால் பலர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தை வாங்கி செல்கின்றனர். 
 
இதனிடையே, சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் ரெம்டெசிவிர் மருந்து வாங்க முயற்சி செய்துள்ளனர். இந்த பணியில் ஈடுப்பட்ட 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ட்ரெச்சர் கூட தரல.. சகோதரனை முதுகில் சுமந்து ஓடும் நபர்! – உத்தர பிரதேசத்தில் அவலம்!