Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (09:06 IST)

தமிழ் புத்தாண்டில் ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டில், புதிய ஆண்டு எப்படி இருக்கும் என பஞ்சாங்கம் வாசிக்கப்படுவது வழக்கம். அவ்வாறாக நேற்று தமிழ் புத்தாண்டில், ராமேஸ்வர, ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் புது பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.

 

ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் “தங்கம் வெள்ளி விலை மேலும் உயரும், ரத்தம் சம்பந்தமான புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் பரவும். ரியல் எஸ்டேட் பின்னடைவை சந்திக்கும். மின் கட்டணம் உயரும். மக்களிடையே பணப்புழக்கம் குறையும்” என சில அதிர்ச்சிகர பஞ்சாங்க கணிப்புகள் கூறப்பட்டுள்ளன.

 

ஆனால் அதேசமயம் “ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றில் உயர்வை காணலாம் என்றும். இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகம் இருக்கும், அதனால் விவசாயமும் செழிப்பாக நடக்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பஞ்சாங்கத்திலும், நல்ல மழை, செழிப்பான விவசாயம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வரிவிதிப்பு, போர் சூழல், அரசியல் மாற்றங்களும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments