ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரண தொகை கிடைக்குமா?

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (19:25 IST)
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களில் பெய்த தொடர் மழை காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் சில நிவாரண அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
 
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாதவர்களும் சென்னையில் வசிக்கும் நிலையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments