Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேனீக்கள் கொட்டியதால் தகன மேடையில் பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம்

தேனீக்கள் கொட்டியதால் தகன மேடையில் பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம்
, ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (17:44 IST)
வாணியம்பாடி அருகே தேனீக்கள் கொட்டியதால் தகன மேடையிலே பிணத்தை போட்டுவிட்டு உறவினர்கள் ஓட்டம் பிடித்தனர்.


 

 
வாணியம்பாடி அடுத்த லாலாஏரி மூலைகொல்லி பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். இவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் சுடுகாட்டுற்கு எடுத்து சென்றனர். அங்கு தகன மேடையில் இறுதி சடங்கு செய்து கொன்இருந்தபோது, தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென கலைந்தது.
 
அங்கு இருந்தவர்களை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால் உறவினர்கள் உடலை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். 
 
அதன்பிறகு வாணியம்பாடி தீயணைப்பு படையினர் அங்கு சென்று சுமார் 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தேனீக்களை விரட்டினர். அதன்பின்னரே தகன மேடையில் இருந்த பிணத்தை எரித்தனர். 
 
தேனீக்கள் கொட்டியதில் இறந்தவர்களின் உறவினர்கள் உள்பட தீயணைப்பு படையினரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

18 வயது சிறுவனை மணந்த 5 குழந்தைகளின் தாய்