Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 26 நவம்பர் 2024 (15:46 IST)

வங்க கடலில் நாளை புயல் உருவாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உள்ள நிலையில் நாளை புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இப்போதே சென்னை தொடங்கி கடலோர மாவட்டங்கள் பலவற்றில் காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

 

இந்நிலையில் நாளை புயல் சின்னம் உருவாக உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலானது டெல்டா மாவட்டங்களுக்கு அருகே கடல் பகுதியில் உருவாகும் நிலையில், டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகப்பட்டிணம் மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

அதுதவிர திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments