Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

Prasanth Karthick
ஞாயிறு, 25 மே 2025 (09:36 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

 

வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 10 நாட்கள் முன்னதாக தொடங்கியுள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

 

அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய உள்ளதாக ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலெர்ட் எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களான படகு இல்லம், தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், டால்பின் நோஸ், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் மூடப்பட்டுள்ளன.

 

மேலும், திருநெல்வேலி, தேனி, தென்காசி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும் என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments