அக்டோபர் 16ஆம் தேதி பவுர்ணமி.. கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?

Siva
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (16:09 IST)
ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்லும் நிலையில், வரும் அக்டோபர் 16ஆம் தேதி பௌர்ணமி தினம் வருவதையடுத்து, கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

புரட்டாசி மாத பௌர்ணமி அக்டோபர் 16ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை, அதாவது அக்டோபர் 17ஆம் தேதி மாலை 5:38 மணி வரை நீடிக்கிறது. இதனை அடுத்து, கிரிவலம் செல்ல தகுந்த நேரம் இதுதான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிரிவலம் வரலாம் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவு 8 மணிக்கே பௌர்ணமி தொடங்குவதால், இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் ஆரம்பித்து நள்ளிரவு அல்லது அதிகாலையில் முடித்து விடலாம் என்றும், அல்லது அதிகாலை ஆரம்பித்து    எட்டு மணிக்குள் முடித்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி கழுத்தை பிளேடால் அறுத்த காதலன்.. காதலி சாகவில்லை.. ஆனால் காதலன் தற்கொலை!

என் உயிரை மட்டும்தான் நீ பறிக்கவில்லை!.. மேடையில் கண்கலங்கிய படி பேசிய ராமதாஸ்!...

'டிட்வா' புயலின் நகர்வு.. அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் மழை எச்சரிக்கை!

சேகர் பாபுவை சந்தித்த பின்னரே செங்கோட்டையன் த.வெ.க-வில் இணைந்தார்: நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் 'பா.ஜ.க. ஸ்லீப்பர் செல்': விஜய்யின் த.வெ.க-வில் இணைந்ததற்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments