Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசல் ஓட்டுனர் உரிமம் எப்போது அவசியம் தெரியுமா?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (12:01 IST)
இன்று முதல் வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.


 

 
எனவே, எப்போதும் தங்களுடன் அசல் ஓட்டுனர் உரிமைத்தை வைத்திருக்க வேண்டுமா? அதை தவற விட்டு விட்டாலோ அல்லது தொலைந்து போய்விட்டாலோ, மீண்டும் அசல் உரிமத்தை வாங்குவதற்கு கஷ்டப்பட வேண்டுமே என பலருக்கும் குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சில  காரணங்களுக்காக மட்டுமே வாகன ஓட்டிகளிடம் அசல் உரிமத்தை பரிசோதிப்போம் என தமிழக போலீசார் தெளிவு படுத்தியுள்ளனர். அவை பின்வருமாறு :
 
1. அதிக வேகம், அதிக சுமை ஏற்றுதல்
2. அதிக ஆட்களை ஏற்றிச் செல்லுதல்
3. குடி போதையில் வாகனம் ஓட்டுதல்
4. போக்குவரத்து சிக்னலில் எல்லையைத் தாண்டுதல்
5. செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல்
6. சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றுதல்
 
என இதுபோன்ற விதிமீறல்கல்களில் வாகன ஓட்டிகள் ஈடுபடும்போது  மட்டுமே அவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமம் கேட்கப்படும் என சென்னை நகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் பெரியய்யா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments