Webdunia - Bharat's app for daily news and videos

Install App

15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; ரியல் எஸ்டேட் அதிபர் கைது!

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2020 (10:44 IST)
சென்னையில் 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக நகர் பகுதியில் வசித்து வருபவர் பால்ராஜ். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவரது வீட்டில் தினசரி வேலைகளை மூதாட்டி ஒருவர் செய்து வந்துள்ளார். மூதாட்டிக்கு 15 வயதில் பேத்தி ஒருவர் உள்ளார். 10ம் வகுப்பு படித்து வரும் சிறுமி விடுமுறை நாட்களில் பாட்டிக்கு உதவியாக பால்ராஜ் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் பால்ராஜ் அந்த சிறுமிக்கு கடந்த ஒரு வருட காலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதை பற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். பால்ராஜின் பாலியல் தொல்லைகளை பொறுக்க மாட்டாமல் தனது பாட்டியிடம் இதுகுறித்து கூறியிருக்கிறார் அந்த சிறுமி. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட போலீஸார் பால்ராஜை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

ஓடும் காரில் கூச்சலிட்டு உதவி கேட்ட 15 வயது சிறுமி.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்