Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகரில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை

ஆர்.கே.நகரில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை
, திங்கள், 16 மே 2016 (19:11 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடும் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


 

 
 
தமிழகத்தில் பெரிதாக எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் இல்லாமல் இன்று சுமூகமாக தமிழக சட்டசபை தேர்தல் 232 தொகுதிகளில் நடந்து முடிந்தது. 5 மணி வரை 69 சதவீத வாக்குகள் பதிவாகியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிவதால், போலி மை பயன்படுத்தப்பட்டதாக  திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும் 8 வாக்குச் சாவடிகளில் மறுதேர்தல் நடத்த விடுதலை சிறுத்தை வேட்பாளர் வசந்தி தேவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்குப்பதிவு நிறைவு : தமிழகத்தில் 69.19 சதவீத வாக்குகள் பதிவு