Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல இடங்களில் மறுவாக்குப் பதிவு! – இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல்!

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (09:29 IST)
தமிழகத்தில் ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் காலை தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

ஊராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாக வந்து வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

கடந்த முதற்கட்ட தேர்தலில் பல வாக்குச்சாவடிகளில் சின்னம் இடம் பெறாமல் இருந்தது, சின்னம் மாறி இருந்தது, வாக்குசீட்டுகள் வார்டு மாறி வந்தது, ஏற்கனவே முத்திரை குத்தப்பட்டிருந்தது என பல்வேறு பிரச்சினைகளால் பல இடங்களில் தேர்தல் தடைப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தடைப்பட்ட இடங்களில் இன்று மீண்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

மதுரை, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தருமபுரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள ஒரு சில வார்டுகளில் மட்டும் மறுவாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments