Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம்.. ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு

Mahendran
புதன், 24 ஏப்ரல் 2024 (12:15 IST)
சென்னை பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவி ஷர்மிளா தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்கொலை செய்து கொண்ட ஷர்மிளா மரணம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
ஷர்மிளாவின் உடற்கூராய்வு சற்று நேரத்தில் நடைபெற உள்ளது என கூறிய காவல்துறை அதிகாரிகள் உடற்கூராய்வு வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் ஷர்மிளா தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்,
 
முன்னதாக சென்னை பள்ளிக்கரணையில் சில மாதங்களுக்கு முன்பு பிரவீன் என்பவர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார் என்ற நிலையில் அவருடைய மனைவி ஷர்மிளா நேற்று தற்கொலை செய்து கொண்டார். பிரவீன் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான ஷர்மிளாவினுடைய தந்தையையும் மற்றொரு சகோதரனையும் கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஷர்மிளாவின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பள்ளி மாணவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் குறித்த பாடம்.. எந்தெந்த வகுப்புகளுக்கு?

விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும்: மர்ம நபர் மிரட்டலால் பரபரப்பு..!

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments