Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்து போல் சென்னையும் கொரோனா இல்லாத நகரமாக மாறும்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Webdunia
செவ்வாய், 9 ஜூன் 2020 (09:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு தத்தளித்து வரும் நிலையில் நியூசிலாந்து நாடு மட்டும் கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது. அந்நாடு எடுத்த அதிரடி நடவடிக்கை மட்டுமன்றி அந்நாட்டில் உள்ள பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பும், இந்த நிலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது 
 
தற்போது நியூசிலாந்தில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என்றும் மக்கள் அங்கு சுதந்திரமாக வலம் வருகிறார்கள் என்றும் ஊரடங்கு உள்பட எந்த கட்டுப்பாட்டும் அந்நாட்டில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து உருவானது போல் சென்னையையும் மாற்ற முடியும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா இல்லாத திருவிக நகர் மண்டலத்தை அரசு அதிகாரிகள் உருவாக்குவார்கள் என்று தான் நம்புவதாகவும், கொரோனா பரவலை தடுக்க தெருவாரியாக 100% விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் ஆர் வி உதயகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் குறிப்பாக சென்னை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நியூசிலாந்து போல் சென்னையும் கொரோனா இல்லாத நகரமாக மாறும் என்று அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments