Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் இனி ரேஷன்!!

Webdunia
புதன், 15 செப்டம்பர் 2021 (10:51 IST)
ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தடுப்பூசி அவசியம் என அறிவிப்பு. 

 
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதன்மையாக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
அதோடு வாரம் ஒரு முறை தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா கேம்ப் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த முகாம் மூலம் பலர் பயன் அடைந்தததால் வரும் 17 ஆம் தேதி மீண்டும் சிறப்பு மெகா முகாம் நடத்தப்படுகிறது. 
 
தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments