Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிகாரன்னா கேவலமா போச்சா? டாஸ்மாக்-கில் எலிக்கறி சப்ளை-வைரல் வீடியோ

Webdunia
புதன், 19 ஜூன் 2019 (13:20 IST)
புதுக்கோட்டையில் டாஸ்மாக் கடையில் எலிக்கறியை முயல்கறி ஃபிரை என்று விற்பனை செய்ததாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள டாஸ்மாக்-கில் எலிக்கறி விற்பனை செய்வதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் எலிகளை பிடித்து வேட்டையாடி கொண்டிருக்க, அப்பகுதி மக்கள் அவனை பிடித்து விசாரித்த போது எலிகளை டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்வதாக தெரிவிக்கிறார். 
அதோடு, இந்த எலிக்கறியை தினமும் அங்கு சப்ளை செய்வதாகவும், அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு முயல்கறி ஃபிரை என்று விற்பதாகவும் அந்த நபர் குறிப்பிட்டார். இந்த வீடியோ தீயாக சமூக வலைத்தளங்களில் பரவியது. 
 
எனவே, உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் உண்மையில் முயல் கறிக்கு மாற்றாக எலிக்கறி டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


 

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments