Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலனை கட்டிப்போட்டு மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ எடுத்த 4 பேர்: பரபரப்பு வாக்குமூலம்

காதலனை கட்டிப்போட்டு மாணவியை கற்பழித்து ஆபாச வீடியோ எடுத்த 4 பேர்: பரபரப்பு வாக்குமூலம்
, திங்கள், 21 ஜூலை 2014 (07:49 IST)
கல்லூரி மாணவியை கற்பழித்த வழக்கில் கைதான 4 பேரும் எடுத்த ஆபாச வீடியோ அடங்கிய செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் தாங்கள் அழைக்கும் போது வராவிட்டால், இணையதளத்தில் அந்த வீடியோ காட்சியை வெளியிடுவோம் என்று மிரட்டியது அம்பலமாகி உள்ளது.
 
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ளது போடம்பட்டி. இங்கு கடந்த 18 ஆம் தேதி கிருஷ்ணகிரியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது காதலன் சேரலாதனுடன் வந்திருந்தார். அந்த நேரம் 4 பேர் சேரலாதனை தாக்கினார்கள். மேலும் கல்லூரி மாணவி அணிந்திருந்த சேலையால் சேரலாதனை கட்டிப்போட்டனர். மேலும் மாணவியை அந்த 4 பேரும் பலவந்தமாக கற்பழித்தனர்.
 
இது தொடர்பாக ராயக்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி, ராயக்கோட்டை ரயில்வே காலனியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ், ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்த மணி (23), எச்சம்பட்டி சேர்ந்த சுப்பிரமணி (26), ஜிட்டாண்டஅள்ளியை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
 
விசாரணையில் அவர்கள் 4 பேரும் சேர்ந்து, கல்லூரி மாணவியை கற்பழித்ததை ஒருவர் மாறி மற்றொருவர் செல்போனில் வீடியோவாக எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 30 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியில் கல்லூரி மாணவி தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள போராடிய பரிதாப காட்சிகள் இருந்ததாக கூறப்படுகிறது.
 
அந்த ஆபாச வீடியோ மாணவியிடம் காட்டிய காமக்கொடூரன்கள் 4 பேரும், மாணவியின் செல்போன் நம்பரை மிரட்டியபடி வாங்கினார்கள். ‘‘நாங்கள் உனது நம்பருக்கு போன் போட்டு அழைக்கும் போது வர வேண்டும். அப்படி வராவிட்டால், இந்த ஆபாச வீடியோ காட்சிகளை நாங்கள் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம்’’ என்று மிரட்டி உள்ளார்கள்.
 
அந்த நேரத்தில் தான் மாடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அங்கு வர கற்பழிப்பில் ஈடுபட்ட 4 பேரும் தப்பி ஓடியது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil