Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதியில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்த வாலிபர்

விடுதியில் தனியாக இருந்த இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்த வாலிபர்
, புதன், 29 ஜூலை 2015 (19:34 IST)
கோவை விடுதியில் தனியாக இருந்த பெண் பொறியாளரை கற்பழித்த வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
ஈரோட்டை சேர்ந்தவர் சீதா (வயது 24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). பொறியாளரான இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 
கோவை சரவணம்பட்டி–காளப்பட்டி பிரிவில் காவல் நிலையம் அருகே உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அவர் தினமும் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு விடுதிக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் சீதா தங்கியிருந்த அறைக்குள் புகுந்து அவரது வாயில் துணியை திணித்து கற்பழித்துள்ளார். இதனால் நள்ளிரவில் அழுது கொண்டே வெளியே வந்த சீதா இதுகுறித்து மற்ற பெண்களிடம் கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் விடுதி நிர்வாகிகளிடம் கூறினர்.
 
வாலிபருடன் எதிர்த்து போராடியதால் முகம் மற்றும் கழுத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி காயங்களை காட்டி சீதா அழுது கொண்டே இருந்தார். இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் கூறினர். உடனடியாக கோவை வந்த அவர்கள் தனது மகளை ஈரோட்டுக்கு அழைத்து சென்றனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துணை ஆணையர் ரம்யபாரதி, உதவி உதவி கீதா மற்றும் காவல்துறையினர் நேற்று இரவு விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். சீதாவை கற்பழித்த வாலிபர் அவருடன் நெருங்கிப் பழகியவராக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர்.
 
இதுகுறித்து விசாரணை நடத்த தனிப்படை காவல்துறையினர் ஈரோடு சென்றனர். அங்கு சீதாவிடம் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்துகின்றனர். அப்போது சீதாவை கற்பழித்த வாலிபரை பற்றிய தகவல் தெரியவரும், அதன்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil