Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு.!!

Senthil Velan
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (11:25 IST)
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக  29வது வார்டு உறுப்பினர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
கோவை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில்  97 வார்டுகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. இதைத்தொடர்ந்து கோவையின் முதல் பெண் மேயராக திமுகவைச் சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வந்தார். 
 
திடீரென தனது மேயர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த ஜூலை 3ஆம் தேதி  கல்பனா ஆனந்த குமார் அறிவித்தார். உடல் நிலை மற்றும் குடும்பச் சூழ்நிலை போன்ற தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து கல்பனா ஆனந்த குமார் ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் விளக்கம் அளித்தார். 
 
இந்நிலையில் கோவை மாநகராட்சியின் மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நாளை (06.08.2024) காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் சு. முத்துசாமி, கே.என் நேரு ஆகியோர் இன்று கோவை காளப்பட்டி சாலையில் உள்ள அரங்கில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ALSO READ: 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!!

கூட்டத்திற்குப் பிறகு கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த ரங்கநாயகி என்பவரை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் கோவை மாநகராட்சியின் 29வது வார்டில் இருந்து  கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments