Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமாருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (18:02 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாருக்கு நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


 

 
ராம்குமார் ஏற்கனவே இரண்டு முறை போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார். போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், அவர் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது.  தற்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இதற்காக புழல் சிறையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது சுவாதியின் தந்தை, ராம்குமாரை அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே, ராம்குமாரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, நீதிமன்ற காவலை ஆகஸ்டு 1-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தார்.
 
இந்நிலையில், அந்த காவல் முடிந்ததையடுத்து, ராம்குமார் இன்று மீண்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ஆகஸ்டு 12ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்த மீனவர்கள்!

திமுக, பாஜக இரண்டு கட்சிகளுக்கும் புரிதல் இருக்கிறது: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்தியா நம்மள நல்லா யூஸ் பண்ணிக்கிறாங்க..! - அதிபர் ட்ரம்ப் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments