Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுவாதி கொலைக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : ராம்குமாரின் தந்தை பேட்டி

சுவாதி கொலைக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : ராம்குமாரின் தந்தை பேட்டி
, வியாழன், 7 ஜூலை 2016 (19:14 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராம்குமாரின் தந்தை பரமசிவம் பரபரப்பு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.


 

 
தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சுவாதியை தான்தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.  
 
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, ராம்குமார் இந்த கொலையை செய்யவில்லை என்றும், உண்மையான குற்றவாளியை மறைக்க போலீசார் முயல்கிறார் என்றும் வழக்கறிஞர் கிருஷணமூர்த்தி என்பவர் பரபரப்பு புகார்களை கூறினார். மேலும், ராம்குமாரின் ஜாமின் மனுவையும் அவர் தாக்கல் செய்தார்.
 
அதன்பின், ராம்குமாரின் ஜாமீன் மனு சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விலகுவதாக கிருஷ்ணமூர்த்தி இன்று திடீர் பல்டி அடித்தார். ராம்குமாரின் கைது பற்றி இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 
 
இந்நிலையில், முதன் முதலாக ராம்குமாரின் தந்தை தற்போது வாய் திறந்துள்ளார்.
 
“சுவாதி கொலைக்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் மகன் எந்த குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்திருந்தால் அவன் எங்கேயோ ஓடி ஒளிந்திருப்பான். இப்படி சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்திருக்க மாட்டான். மேலும் அவன் தற்கொலைக்கு முயற்சி செய்யவில்லை. போலீசார்தான் அவன் கழுத்தை அறுத்தனர்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

36 குட்டிகளை ஈன்ற வண்டலூர் உயிரியல் பூங்கா மலைப்பாம்பு