Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

ராம்குமார் பிரேத பரிசோதனை: தந்தை தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2016 (10:59 IST)
ராம்குமாரின் உடலை பிரேதபரிசோதனை செய்யும் மருத்துவர்கள் குழுவில் தனியார் மருத்துவர் பங்கேற்க வேண்டும் என்ற ராம்குமார் தந்தையின் மேல் முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


 
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராம்குமார் தந்தை பரமசிவத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவை தள்ளுபடி செய்தனர். ஏற்கனவே உயர் நீதிமன்றம் அவரது கோரிக்கையை நிராகரித்து எயிம்ஸ் மருத்துவரை சேர்த்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது.
 
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடி தனியார் மருத்துவரை சேர்க்க வேண்டும் என மனுதாக்கல் செய்தார். இதனை விசாரணைக்கு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
 
மேலும் அக்டோபர் 1-ஆம் தேதிக்குள் எயிம்ஸ் மருத்துவரை நியமித்து பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை ஏற்றுக்கொண்டு பிரேத பரிசோதனைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய நிலையில் ராம்குமார் தரப்பு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments