Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தது ராம்குமார் பிரேத பரிசோதனை: உடல் தந்தையிடம் ஒப்படைப்பு!

முடிந்தது ராம்குமார் பிரேத பரிசோதனை: உடல் தந்தையிடம் ஒப்படைப்பு!

Webdunia
சனி, 1 அக்டோபர் 2016 (16:03 IST)
சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் மர்மமான முறையில் இறந்த ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இன்று நடைபெற்றது.


 
 
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பிரேத பரிசோதனையை செல்வகுமார், எயிம்ஸ் மருத்துவர் கதி கே.குப்தா உள்பட 5 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு செய்தது.
 
இரண்டரை மணி நேரம் நடந்த இந்த பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும் ராம்குமாரின் தந்தை பரம சிவத்திடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.
 
ராம்குமாரின் உடலை நாங்கள் பரிந்துரைக்கும் தனியார் மருத்துவர பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என ராம்குமாரின் தந்தை கூறியிருந்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் எயிம்ஸ் மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதனையடுத்து ராம்குமாரின் உடல் இன்று எயிம்ஸ் மருத்துவரை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை :62 வயது முதியவர் போக்ஸோவில் கைது!

அவர் இல்லைன்னா உயிரே போயிருக்கும்! காப்பாற்றிய ஆட்டோ டிரைவரை அழைத்து நன்றி சொன்ன சயிஃப் அலிகான்!

சமணர் குகைக்கு பச்சை பெயிண்ட் அடித்த மர்ம நபர்கள்! - திருப்பரங்குன்றத்தில் தொடரும் மத பிரச்சினை!

பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ்.. நிதிஷ் குமார் கட்சி அறிவிப்பு..!

சென்னை அண்ணாநகர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. இளம்பெண் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments