Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொய் வழக்கென கூறி கையெழுத்திட ராம்குமார் மறுப்பு

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (16:29 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் கையெழுத்திட மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரின் கையெழுத்து மாதிரியை பெற அனுமதிக்க வேண்டும் என போலீசார் எழும்பூர் 14வது நடுவர் நீதித்துறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ராம்குமாரை வியாழனன்று ஆஜர்படுத்தி கையெழுத்து மாதிரியை பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.
 
இதனையடுத்து ராம்குமார் பலத்த பாதுகாப்புடன் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீதிபதி கோபிநாத், ராம்குமாரிடம் கையெழுத்து போட சொன்னார்.
 
ஆனால், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக கூறியுள்ள ராம்குமார் கையெழுத்து போட மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments