Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

Mahendran
புதன், 5 பிப்ரவரி 2025 (14:44 IST)
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.
 
கடந்த 26ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்தது. இதையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி கைதான மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைது செய்யப்பட்ட 34 மீனவர்களில் 19 பேரை மட்டும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. மேலும், படகு உரிமையாளர்கள், 2 படகு ஓட்டுனர்கள் என 3 பேருக்கு இலங்கை பண மதிப்பில்  ரூ.60.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மீதமுள்ள 16 பேருக்கு தலா 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
 
மேலும், விடுதலை செய்யப்படாத மீதமுள்ள மீனவர்களின் படகு விவரங்களில் முரண்பாடு இருப்பதால், இந்த வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
 
இதனை அடுத்து, 19 மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள மீனவர் சங்கங்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments