Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? ரமணன் தகவல்

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2020 (08:03 IST)
வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும் என்று முன்னாள் சென்னை மண்டல வானிலை இயக்குனர் ரமணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
பொதுவாக வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கி சராசரியாக பருவமழை பெய்து வரும். ஆனால் இந்த ஆண்டு அக்டோபர் 28-ம் தேதிதான் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை இங்கு வருடம் தாமதமாகத்தான் தொடங்கினால் அடுத்த சில நாட்களில் நல்ல மழை பெய்யும். கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதிக்கு மேல்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் அந்த வருடம் தான் மிக அதிகமாக மழைபெய்தது
 
தெற்கு கடலோர பகுதிகள், தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் மிதமான மழையும் மற்ற பகுதிகளில் சற்று அதிகமாகவே மழை பெய்யும். ஐரோப்பிய ஒன்றிய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி தமிழகத்தில் இந்த ஆண்டு நல்ல மழை பெய்யும். நவம்பர் டிசம்பர் மாதங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments